புதையல் தோண்டிய நால்வர் கைது

kaithu

சாலிய வாவி – நீலபம்ப பகுதியில் புதையலொன்றை அகழ்வதற்கு முயற்சித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (22) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களில் பிக்குவாக நடித்துள்ள ஒரு சந்தேக நபரும் இருப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த சந்தேக நபர்களை இன்று (23) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.