மோட்டார் சைக்கிள் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Bike
Bike

மோட்டார் சைக்கிள் விபத்தில் நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், மோட்டார் சைக்கிள்களை திட்டமிட்டு திருடும் ஒரு குழு பற்றி தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தளம், ஆரச்சிகட்டுவ, இரத்தினபுரி, கொடவெஹெர மற்றும் கம்பஹா போன்ற பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.