தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக தெரிவு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளரும், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் மாவட்ட இணைப்பாளருமான சிவராம் கலந்துகொண்டார்.
இதன் போது கடந்த வருடம் சிறப்பாக செயற்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்களிற்கு சான்றிதள்களும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் அதிதி உரையாற்றியதன் பின்னர் கிளிநொச்சி இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் பயன்படுத்தி வருவது தொடர்பிலும், இளைஞர் திறன் விருத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதனை விடுவித்து தர நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.