மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

625.500.560.350.160.300.053.800.900.160.90 15
625.500.560.350.160.300.053.800.900.160.90 15

கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த கல்முனை வடக்கு மற்றும் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நேற்று மாலை 6 மணி முதல், வெள்ளவத்தை நசீர்வத்தை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், நிட்டம்புவை காவற்துறைப் பிரிவின் வாரணை விஹாரை வீதி, கத்தொட்டை வீதி மற்றும் இந்திரா மாவத்தை ஆகிய இடங்களும், மினுவாங்கொடை காவற்துறைப் பிரிவின் கல்ஒலுவ கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இடங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், மினுவாங்கொடை காவற்துறைப் பிரிவின் கல்ஒலுவ பிரதேசத்தின் ஜும்மா மஸ்ஜுத் மாவத்தை, இந்திரா மாவத்தை புதிய வீதி மற்றும் அக்கரகொட ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.