இரு தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பிரதேசத்தில் பதிவாகின்றது.
தம்புள்ளை- கண்டலம- கெப்பெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற பருவமடைதல் நிகழ்வில் கலந்து கொண்ட சிலருக்கும், மரண சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கும் இடையில் இந்த மோதல் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த மோதலில் ஈடுபட்டதாக கருதப்படும் சந்தேக நபர்கள் 18 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.