காவல்துறையினர் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5e694437a3739.image 2
5e694437a3739.image 2

கண்டி அங்கும்புர காவல்நிலையத்திற்கு தொடர்புடைய காவல்துறையினர் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கும்புர காவல்நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஏனைய அதிகாரிகளை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கண்டி சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார்.

அங்கும்புர காவல் நிலையத்தின் நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக ஏனைய காவல் நிலையங்களின் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.