சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று (26) பி.ப. 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்று அநேகமாக மழையற்ற ஒரு காலநிலையே தென்படுமெனவும் அத்திணைக்களம் தொிவித்துள்ளது.
மேல், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படுமெனவும் அத்திணைக்களம் தொிவித்துள்ளது.