திறந்து வைக்கப்பட்ட வாசிப்பு நிலையத் தொகுதி!

IMG 20210126 WA0011
IMG 20210126 WA0011

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட செங்கலடி A5 வீதியில் அமைந்துள்ள பொது பஸ்தரிப்பிடக் கட்டிடத்தில் பயணிகள் மற்றும் வாசகர்களின் பயன்கருதி அமைக்கப்பட்ட வாசிப்பு நிலையத் தொகுதி இன்றைய தினம் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி பிரதேச சபையின் செங்கலடி வட்டார உறுப்பினர் வ.சுரேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக மேற்படி வாசிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

வட்டார உறுப்பினர் வ.சுரேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர், பிரதித் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.