இனம் தெரியாத நபர்களால் வீடு எரிப்பு!

IMG 20210126 WA0007 1
IMG 20210126 WA0007 1

வவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று எரிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த நபர் நேற்றையதினம் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது அவரது வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்ததுடன், கூக்குரலிட்டு அயலவர்களிற்கு தெரியப்படுத்தினார். விரைந்துவந்த அயலவர்கள் வீட்டின் தீயை அணைத்திருந்தனர்.

சில விசமிகளால் தனது வீடு எரிக்கப்பட்டுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். குறித்த வீட்டின் உரிமையாளர் இரு கண்களும் பார்வையிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினருடன் இணைந்து வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.