பாணந்துறை துப்பாக்கி சூடு சம்பவம் ; சந்தேக நபர் கைது

kaithu

பாணந்துறை வடக்கு துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை வடக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானவர் பயணித்த முச்சக்கரவண்டியில் பயணித்த 27 வயதான மற்றுமொருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாணந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.