திருகோணமலையில் விபச்சார விடுதி முற்றுகை

Arrest 2
Arrest 2

திருகோணமலை நகரில் தலைமையக காவல் பிரிவிற்கு உட்பட்ட மத்திய வீதியில் பாடசாலையின் எதிரே நீண்டகாலமாக மஸாஜ் கிளப் என்கின்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று இன்று (27) தலைமையகப் கவால்துறையினரால் முற்றுகையிடப்பட்டது.

முற்றுகையின் போது மூன்று பெண்கள் உட்பட விடுதி நடத்திய ஆண் ஒருவரையும் தாம் கைது செய்ததாக தலைமையகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து விடுதி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஐர் படுத்த தலைமையகப் காவல்துறையினர் நடவடிக்கைகள மேற்கொள்கின்றனர்.