அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்காக துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை!

1611751860 gov 2
1611751860 gov 2

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்காக துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் அண்மையில் அதன் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார். அரச மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பிரதான பொறுப்பு ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச மொழிக் கொள்கை தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தல், பரிந்துரை வழங்குதல், கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பாக கண்காணித்தல், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் ஆகிய தரப்புக்களுக்கு மொழி அறிவை வழங்கும் பொறுப்பு ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.