கொக்குவில் உணவக உரிமையாளர் மீது தாக்குதல்!!

attack
attack

கொக்குவில் ஆடியபாதம் வீதியில் வைத்து உணவக உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆடியபாதம் வீதி ரயில் கடவைக்கு அருகில் உள்ள உணவக உரிமையாளரே மேற்படிச் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

நேற்று இரவு 10.45 மணியளவில் கொக்குவில் சந்திப் பகுதியில் இருந்து தனது உணவகத்திற்குச் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த அவரை மேட்டார் சைக்கிலில் துரத்தி வந்தவர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கு முச்சக்கர வண்டியை விட்டு பாய்ந்த ஓடிய அவரை அந்த கும்பல் துரத்திச் சென்ற போதும், அவர் அங்குள்ள டோன்றில் தஞ்சம் புகந்துள்ளார்.

இதனால் அவருடைய முச்சக்கர வண்டியை அடித்து நொருக்கிய கும்பல், முச்சக்கர வண்டியை வீதிக்கு அருகில் இருந்த வெள்ள வாய்க்காலுக்குள் தள்வி விழுந்திவிட்டுச் அங்கிருந்து சென்றுள்ளனர்.