எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படாது- நவீன் திஸாநாயக்க!

Navin
Navin

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த பதவியை நிராகரித்த அவர் கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது இதனை குறிப்பிட்டார்.

கட்சியில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படவில்லை. கட்சியில் சேவையாற்றுவதற்கு பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. எனினும் எதிர்பார்க்காத சிலருக்கு தற்போது பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.