கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த சுகாதார அமைச்சர் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மருத்துவபீட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே இவ்வாறு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.