1000 ரூபாவை வழங்கினால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகும் – ஜீவன்

Jeevan Thondaman2
Jeevan Thondaman2

அரசாங்கம் தலையிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனத்தை வழங்குமாகவிருந்தால் கூட்டு ஒப்பந்தத்தின் சம்பள பகுதியில் இருந்து தமது தரப்பு விலகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்னெடுக்கப்படுகின்ற 16 கற்கைநெறிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.