நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் சுவிஸ் தூதரக பெண்

awiss
awiss

இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரக பெண் அதிகாரி குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறி சுவிசர்லாந்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

கடத்தலுக்குள்ளான இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரக ஊழியர் தற்போது பேசுவதற்கு கூட அச்சமடைவதாகவும், அவர் குடும்பத்தினருடன் கூட சரியாக பேசமுடியாத நிலையில் காணப்படுகின்றார்.

இந்நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதில் நியாயம் இல்லை.

இதேவேளை எங்களது 5 வருட ஆட்சி காலத்தில் எவரும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி நாட்டை விட்டு வெளியேறியது கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.