மன்னார் – திருக்கேதீஸ்வரம் வேட்டையான்முறிப்பு பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கி இருவர் மரணித்தனர்.
மன்னார் காவல்துறையினர் இதனை உறுதிப்படுத்தினர்.
வயல்வெளி ஒன்றிற்கு சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்ற நிலையில் அதன் கம்பியில் சிக்கி அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
38 மற்றும் 45 வயதுகளை உடைய ஆண்களே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.