வவுனியா வைத்தியசாலைகளூடாக சுகாதார துறையினர் மற்றும் மருத்துவ சேவையாளர்களிற்கு வழங்குவதற்காக 1700 டோஸ் கொவிட் -19 தடுப்பூசி மருந்துகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.