பயங்கரவாத தடுப்புபிரிவு உத்தியோகத்தர்கள் 17பேருக்கு கொரோனா!

big 165616 Coronavirus 1 3
big 165616 Coronavirus 1 3

வவுனியாவில் பணிபுரியும் பயங்கரவாத தடுப்புபிரிவு மற்றும் ஏனைய காவல்துறை பிரிவுகளை சேர்ந்த 17 உத்தியோகத்தர்களிற்கு கொரோனா தொற்று இன்று (29) உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புபிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த பிரிவில் பணிபுரியும் உத்தியோகத்தர்களிற்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியிருந்தன.

அதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ஏனைய காவல்துறை பிரிவுகளை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.