ஹற்றனில் சட்டத்தரணி ஒருவருக்கு கொரோனா!

coronavirus.positive.1 768x384 1
coronavirus.positive.1 768x384 1

ஹற்றன் நீதிவான் நீதிமன்றத்தின் சட்டத்தரணி ஒருவருக்கு கொவிட்-19 தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹற்றன் -டிக்கோயா நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்.எஸ் மடவள இதைத் தெரிவித்தார்.

தொற்றாளர் இனங்காணப்பட்டதையடுத்து நீதிவான் நீதிமன்றம் தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன் நீதிமன்றின் சட்டத்தரணிகள் அடங்கலாக 37 ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இப்பிரதேசத்தில் ஆசிரியராக பதவி வகிக்கும் சட்டத்தரணியின் மனைவி மூலம் இவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.