எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

the
the

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய,வடக்கு,வடமத்திய,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பொழியும் வேளையில் மக்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.