கிழக்கு கொள்கலன்முனையம் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிக்கவேண்டும் – ஞானசார தேரர்

அத்தே ஞானசார தேரர்
அத்தே ஞானசார தேரர்

கொழும்பு துறைமுகம் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவு படுத்தவேண்டும் என பொதுபல சேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.


கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை வெளியிடுகின்றனர் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

சர்வதேசத்தின் உதவியின் நாடு பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இலங்கை கடனில் சிக்கியிருக்கும் நாடு பொதுமக்கள் தியாகங்களை செய்ய தயாராகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.