கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை போல மேற்கு கொள்கலன் முனையத்தையும் இந்திய நிறுவனத்திடம் கையளிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய சொத்துக்களை பாதுகாப்பது அனைவரினதும் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திலோ அல்லது நாட்டின் வேறு எந்த பகுதியிலோ உள்ள எந்த முனையத்தையும் வெளிநாட்டிற்கு கையளிக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால தலைமுறைக்காக தேசிய சொத்துக்களை பாதுகாக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்