63,293 ஆக அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை!

vikatan 2020 04 684aab70 a921 4e96 a9d3 c616970fd26d covid 19 5057462 1920
vikatan 2020 04 684aab70 a921 4e96 a9d3 c616970fd26d covid 19 5057462 1920

இன்று ஜனவரி 31ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 848 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 63,293 ஆக அதிகரித்துள்ளதாக கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் , கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 157 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 136 பேரும் குருகாணலை மாவட்டத்தை சேர்ந்த 108 பேரும், களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா 82 பேரும் அடங்குவதாக கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 882 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57,159 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6,742 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் எட்டு பேர் உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 313 ஆக உயர்வடைந்துள்ளது.