பட்டதாரி பயிலுனர்களிற்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (01) இடம்பெற்றது.
நாட்டில் 50 ஆயிரம் பட்டதாரிகளிற்கு அரச நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 357 பட்டதாரிகள் பயிலுனர்களாக இணைத்து கொள்ளப்பட்டனர்.
குறித்த நேர்முகத்தேர்வில் பல்வேறு காரணங்களிற்காக நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் பலர் மேன்முறையீடு செய்திருந்த நிலையில் அவர்களில் வவுனியாவை சேர்ந்த மேலும் 38 பேர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.
அவர்களில் 30 பேருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் ந.கமலதாசன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கருணாநிதி ஆகியோர் பட்டதாரிகளிற்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தனர்.