நாட்டில் இதுவரை 95 ஆயிரத்து 550 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

110914590 be6b51c2 3929 4683 ae5d f479955f5f98 3
110914590 be6b51c2 3929 4683 ae5d f479955f5f98 3

நாட்டில் இதுவரை 95 ஆயிரத்து 550 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் 36 ஆயிரத்து 396 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.