வள்ளுவர் நினைவுதினம் அனுஸ்டிப்பு

IMG 7994
IMG 7994


திருவள்ளுவர் நினைவுதினம் வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ள அவரது நினைவு சிலையடியில் இன்று (02) இடம்பெற்றது. 

இதன்போது அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழருவி சிவகுமாரன் திருவள்ளுவர் தொடர்பான சிறப்புரையினை நிகழ்த்தியிருந்தார்.  

நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான,நா.சேனாதிராஜா, ரி.கே.ராஜலிங்கம், சு.காண்டீபன், செயலாளர் இ.தயாபரன், சமூக ஆர்வலர் சந்திரகுமார், நகரசபை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும்  கலந்து கொண்டனர்