கொழும்பில் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 715 பேரில் 261 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி கடந்த ஆண்டு ஒக்டோபர் 04 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 142 பேர், பதுளை மாவட்டத்தில் 61பேர், குருணாகல் மாவட்டத்தில் 53 பேர், கண்டி மாவட்டத்தில் 43 பேர், களுத்துறை மாவட்டத்தில் 40 பேர், காலி மாவட்டத்தில் 24 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 23 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் 14 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 11 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 08பேர், மொனராகலை மாவட்டத்தில் 07 பேர், மாத்தறை மாவட்டத்தில் 07 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 05 பேர், நுவரெலியா மாவட்டத் தில் 02 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பேர், திரு கோணமலை மாவட்டத்தில் ஒருவர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.