விடுதலைப்புலிகளிற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் கிளிநொச்சியில் மூன்றாம் நாளாக இன்றும் தொடர்கின்றது

IMG 20210203 114045
IMG 20210203 114045

விடுதலைப்புலிகளிற்கு உதவியதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் மூன்றாம் நாளாக இன்றும் தொடர்கின்றது. குறித்த போராட்டம் நேற்று முன்தினம் (01.02.2021) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த போராட்டமானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பந்தல் அமைக்கப்பட்டு தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று மூன்றாவது நாளாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.