வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள 129 சந்தேக நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 129 சந்தேக நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுள் 40 பேரளவில் இந்நாட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் தேடப்பட்டு வருபவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தொிவித்துள்ளார்.

அத்துடன் வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 87 பேருக்கு சர்வதேச காவல்துறையினர் நீல எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.