கிளிநொச்சியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி க.கோகிலவாணிக்கு போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நீதிமன்ற கட்டளையை கிளிநொச்சி காவல்துறையினர் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் , அந்த பகுதியில் பெருமளவு காவல்துறையினர் , புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.