வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா!

112568612 gettyimages 1214909868
112568612 gettyimages 1214909868

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 5 பேர் மன்னார் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த வாரம் கொரோனா நோயால் உயிரிழந்தவருடன் தொடர்புடையவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 667 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 6 பேர் மன்னார் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முசலியில் கடந்த வாரம் கொரோனா நோயால் உயிரிழந்தவருடன் தொடர்புடைய 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் ஒருவர் வெளிமாவட்டதிலிருந்து வருகை தந்து முசலியில் தங்கியிருந்து மீன்வாடியில் தொழில் செய்பவர்.

வவுனியா வைத்தியாலையில் சேர்க்கபட்ட இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் இருவரும் வவுனியா காவல்துறை நிலைய உத்தியோகத்தர்கள்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.