பேரணியை வரவேற்க தயாராகும் மக்கள் :முல்லைத்தீவுக்குள் நுழைந்தது பேரணி

08
08

இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியினை வரவேற்பதற்கு முல்லைத்தீவில் நாயாற்றுப் பாலத்திற்கு அருகில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் தயாரான நிலையிலுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு காவல்துறையினர் தடையுத்தரவுடன் வருகை தந்துள்ளனர். தற்போது பேரணி முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது.

தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் இந்தப் பேரணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதரன் மற்றும் இரா.சாணக்கியன் உள்ளிட்டோர் தொடர்ந்தும் பேரணியில் இணைந்துள்ளனர்.

எனினும் பேரணியினை வரவேற்பதற்காக உள்ள குழுவினர், தாம் கொவிட் -19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியே தாம் பேரணியை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறித்த எழுச்சிப் பேரணியை முன்னடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.