விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவரினால் கொண்டு நடாத்தப்படும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் உந்துருளியில் பயணிக்கும் வேளையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருள் வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்பட்ட கையடக்கதொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.