ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை சம்பந்தமாக 12 ஆம் திகதி வரை தீர்மானம் மேற்கொள்ள வேண்டாம்-மேன்முறையீட்டு நீதிமன்றம்!

supreme court
supreme court

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை சம்பந்தமாக, 12 ஆம் திகதி வரை தீர்மானம் மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கு இன்று (05) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதை தடுக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது.