கேகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ ஊழியர்கள் இருவருக்கு கொரோனா!

covid 4
covid 4

கேகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ ஊழியர்கள் 50 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், நோய் அறிகுறிகள் காணப்பட்ட கேகாலை காவல்துறையின் போக்குவரத்து பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்க அதிகாரிகள் தீரமானித்துள்ளனர்.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், கொரோனா தொற்றாளர்கள் பதிவாகாத சிறைச்சாலைகளுக்கு மட்டுமே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.