வத்தளையின் சில பகுதிகளில் நாளை 18 மணிநேர நீர் விநியோகத் தடை!

download 1 3
download 1 3

ஹேக்கித்த, பள்ளியாவத்தை, வெலியமுன வீதி, பலகல, கலகஹதுவ மருதானை வீதி, எலகந்த மற்றும் எந்தல வீதியின் ஒரு பகுதி முதலான பகுதிகளில் நாளை இரவு 10 மணிமுதல் 18 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

வத்தளை நீர்வழங்கல் திட்டம் மூலம் வீதி அபிவிருத்திக்கு இணையாக ஹேகித்த நீர்விநியோக குழாய் கட்டமைப்பில் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக, குறித்த பகுதிகளில் நாளை இரவு 10 மணிமுதல் நாளை மறுதினம் மாலை 4 மணிவரையில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.