மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த வீதியின் வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து காவல்துறையினர் இரவு 7.00 மணியளவில் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் சடலம் அடையாளம் காணப்படவில்லை.
எனவே இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.