வத்தளை பிரதேசத்தில் 18 மணித்தியால நீர் வெட்டு

OIP 5
OIP 5

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக வத்தளையின் பல பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் நாளை பிற்பகல் 4 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது

நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஹேகித்த, பள்ளியாவத்தை, வெலியமுன வீதி, பலகல, கலகஹதுவ மரதான வீதி, எலகந்தை, மற்றும் ஹெந்தலை வீதியின் ஒரு பகுதியில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது