உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் மூவர் கைது

kaithu

இறக்குவானை – மஹபன்னில பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு இதன்போது 4 டெட்டனேட்டர்கள், 3 உபயோகிக்ககூடிய தோட்டாக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இறக்குவானை – மஹபன்னில பகுதியை சேர்ந்த 30 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை இறக்குவானை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது