இன்றைய காலநிலை தொடர்பான விபரங்கள்!

987d4109 7fd68dc1 rain 850x460 acf cropped
987d4109 7fd68dc1 rain 850x460 acf cropped

சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று (09) பி.ப. 2.00 மணியின் பின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக இன்றைய தினம் மழையின்றிய காலநிலை நிலவக்கூடுமெனவும் அத்திணைக்களம் தொிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வயம்ப மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுகளிலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் கடும் காற்று வீசக்கூடுமெனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சபரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமுடனான வானிலை நிலவக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தொிவித்துள்ளது.