அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்துங்கள் – பிரதமர் ஆலோசனை

Mahinda Rajapaksa
Mahinda Rajapaksa

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காலத்துடனும் போட்டி வேண்டியுள்ளது.

எனவே, இந்த 5 வருட காலப்பகுதியில் மக்கள் எதிர்பார்த்த செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும்.

தற்போது சேவையாற்ற கூடிய சக்திமிக்கதும், அனுபவமிக்கதுமான தரப்பினர் எம்முடன் உள்ளனர்.

எனவே, அதனூடாக முழுமையான வெளிப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.