பாரிய குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச இரசாயன பகுப்பாய்வார்களின் அறிக்கை தாமதமடைகின்றமையே, விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளதென அமைச்சின் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கைகளை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் நிறுவன மட்டத்தில் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு புதிதாக உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாரிய குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 03 மாதங்களுக்குள் விசாரணைகளை நிறைவு செய்து வழக்கு தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர், காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.