15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் கைது

kaithu

காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 7 மாத கர்பமாக்கிய 25 வயது இளைஞர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்துள்ளதாக காத்தான்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்போது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டு பிடிக்கப்பட்தையடுத்து காவல்துறையினர் குறித்த இளைஞரை நேற்று கைது செய்துள்ளனர்

சிறுமி கர்ப்பம் தரிக்கும் போது 15 வயது எனவும் தற்போது சிறுமிக்கு  16 வயதும் 1 மாதம் எனவும் 7 மாத கர்பிணியாக இருப்பதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.