மூதாட்டி வன்புணர்ந்து கொலை; இளைஞன் கைது

kaithu

கேகாலை – தெவலகமை பகுதியில் நேற்று முன்தினம் (9) 78 வயதுடைய மூதாட்டியை வன்புணர்ந்து கொன்றமை தொடர்பில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் குற்றத்திற்காக சிறையில் இருந்த விலையில் விடுதலை செய்யப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் இருந்த நபரே இவ்வாறு கைதாகினார்.

சந்தேக நபர் வீட்டு கூரை வழியாக வீட்டுக்குள் நுழைந்து பணம், நகைகளை கொள்ளையிட்டதுடன், அங்கு தனிமையில் தூக்கத்தில் இருந்த மூதாட்டியை வன்புணர்ந்தார் என்றும், அதன் விளைவால் மூதாட்டி இறந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்