உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

kaithu

மாத்தறை மொரவக்க பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரவக்க காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.