‘தீகவாவியை மீண்டும் காண்போம்’ செயற்றிட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!

தாதுகோபுர புனரமைப்பு PMO Tamil News 008
தாதுகோபுர புனரமைப்பு PMO Tamil News 008

தீகவாவி விஹாரையை புனரமைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய நிதி உதவிகளை பெறும் நடவடிக்கை இன்று (12) ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பில் உள்ள சம்போதி விகாரையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பலர் தீகவாவி விஹாரையை புனரமைக்க ஜனாதிபதியிடம் நிதி பங்களிப்பை வழங்கினர்.

´தீகவாவியை மீண்டும் காண்போம்´ என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியால் அங்குராட்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் ஓய்வப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, தீகவாவியை புனரமைத்து எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மக்களிடம் கையளிக்கப்படும் என கூறியுள்ளார்.