உழவர் சந்தைக்கு விவசாயிகள் பொருட்களை கொண்டு வர வசதியாக பேருந்து சேவை

1
1

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு விவசாயிகள் கிராமங்களில் இருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு வசதியாக தனியார் பேருந்துகள் அனைத்தையும் பழைய பேருந்து நிலையத்தினூடாக சேவையில் ஈடுபடுமாறு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

விவசாயிகள் உள்ளுர் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு பேருந்துகளில் பொருட்களை கொண்டு வரும்போது அப் பேரூந்துகள் பழைய பேரூந்து நிலையத்தினூடாக பயணிக்க வேண்டும் என அனைத்து உள்ளுர் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே விவசாயிகள் தமது விளைபொருட்களை நேரடியாக பழைய பேருந்துநிலையத்தில் அமைந்துள்ள உழவர் சந்தைக்கு கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தார்.