வவுனியாவில் நெல் கொள்வனவிற்கான நிதி வழங்கி வைப்பு

DSC00419
DSC00419

வடக்கில் காலபோக நெல் கொள்வனவிற்கான சௌபாக்கியா கடன்திட்டம் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (13) இடம்பெற்றது.

இதன்போது வடக்கில் அமைந்துள்ள வவுனியா, நானாட்டான், பூநகரி, தென்மராட்சி கிழக்கு, கரைச்சிதெற்கு, கரைத்துறைப்பற்று, விசுவமடு, வவுனியா வடக்கு ஆகிய  8 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களிற்கு மொத்தமாக 90 இலட்சம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வர்த்தகத்துறை அமைச்சர்  பந்துலகுணவர்த்தன, ராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண, வடமாகாண ஆளுனர் எம்.சாள்ஸ், வடமாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.